உதயநிதிக்கு எதிரான சனாதன வழக்கு முடித்துவைப்பு

104234பார்த்தது
உதயநிதிக்கு எதிரான சனாதன வழக்கு முடித்துவைப்பு
அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி, திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிரான இந்து முன்னணி தொடர்ந்த கோ-வாரண்டோ வழக்குககளை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பு வழங்கியுள்ளார். சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய அவசியமில்லை, மனுதாரர் கேட்கும் கோரிக்கையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி