தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - நீதிமன்றம் கேள்வி

74பார்த்தது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்காதது ஏன்? என தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த கேள்வியை முன்வைத்துள்ளது.