கவரைப்பேட்டையில் இன்று இரவுக்குள் போக்குவரத்து சீராகும்

55பார்த்தது
கவரைப்பேட்டை வழியாக இன்று (அக்.12) இரவு 9 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர், "புதிய தண்டவாளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 4 ரயில் பாதைகளில் இரு பாதைகளில் இன்று இரவுக்குள் போக்குவரத்து சீராகும். மீதமுள்ள இரு பாதைகளில் நாளை காலைக்குள் போக்குவரத்தை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

நன்றி: கலைஞர் செய்திகள்

தொடர்புடைய செய்தி