டாப்ஸ்லிப் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை

77பார்த்தது
டாப்ஸ்லிப் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை
டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். 100 சதவிகித வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளும் பகல் காட்சி திரையிடப்படாது. இரவுக் காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும்.

தொடர்புடைய செய்தி