பேருந்துகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

78பார்த்தது
திருவண்ணாமலையில் போக்குவரத்து துறையின் 32 புதிய பேருந்துகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன், மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி சரவணன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி , துரை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி