தாறுமாறாக சென்ற கார்.. மடக்கி பிடித்த வாகன ஓட்டிகள்

81பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று, சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனை கவனித்த சக வாகன ஓட்டிகள், தாறுமாறாக சென்ற காரை பின் தொடர்ந்து சென்று விரட்டிப் பிடித்தனர். தொடர்ந்து, காரை ஓட்டிச் சென்ற இளைஞரை மடக்கிய மக்கள், உடனடியாக போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினரிடம், இளைஞரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

நன்றி: MalaimurasuTv