புதிய பேருந்து நிலையம் திறப்பு -அமைச்சர் தகவல்

72பார்த்தது
2025 ஜனவரி மாதம் புதிய பேருந்து நிலையம் திறப்பு அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் அருகில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பணிகள் முடிவடைந்து 2025 ஜனவரி மாதம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது எனவும் மேலும் (போக்குவரத்து நடைபெறும் போது விரிவாக்க பணி நடைபெறும்) ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள 4 ஏக்கர் அரசு இடத்தை கொண்டு பேருந்து நிலையம் விரிவுபடுத்த உள்ளதாகவும், புதிய பேருந்து நிலையத்தில் 100 பேருந்துகளை நிறுத்த வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி