சிவன் ஆலயத்தில் பிரதோஷ பூஜை

72பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் மேல்முடியனூர் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று பின்னர் நாகாபரணம், கிரீடம் ஆகிவையும் சிவபெருமானுக்கு சூட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி