உடுமலை அருகே பிஏபி கால்வாயில் தண்ணீர் திருட்டு

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே அரசூர் பகுதியில் பிஏபி வாய்க்காலில் இருந்து பகிர்மான கால்வாய் குப்பம்பாளையம் கிருஷ்ணாபுரம் ஆமந்தகடவு வழியாக செல்கிறது இந்த நிலையில் இப்பகுதியில் இரவு நேரத்தில் ஓரு சிலர் குழாய் மூலம் தண்ணீர் திருடியதாக கூறப்படுகின்றது.
எனவே இப்பகுதி விவசாயிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உடுமலை திருப்பூர் சாலையில் பெரிய பட்டி என்னும் இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி