உடுமலையில் மரண வாக்குமூலம் எழுதி வைத்த V. I. O -பரபரப்பு!!

79பார்த்தது
உடுமலையில் மரண வாக்குமூலம் எழுதி வைத்த V. I. O -பரபரப்பு!!
திருப்பூர் மாவட்டம்
உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புசாமி என்பவர் நேற்று கூலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கருப்பசாமி இறப்பதற்கு முன்பு எழுதிவைத்த மரண வாக்கு மூலம் கடிதத்தை அவரது உறவினர்கள் கோகுல் இளவரசன் சந்துரு ஆகியோர் உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணணிடம் வழங்கினர். வாக்குமூலத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர் சித்ரா , மக்கள் மித்திரன் மாத இதழ் ஆசிரியர் மணி தான் என் சாவுக்கு காரணம் என எழுதி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கிடையில் உடுமலை ப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் போடப்பட்ட அவசரக் கூட்டத்தில் கருப்பு சாமியை தற்கொலைக்குத் தூண்டிய இருவர் மீது இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி