ராட்வீலர் நாய் கடித்து காயம்

63பார்த்தது
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம், பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை என ஒருங்கே அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் காலை மாலை ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்று வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்டு வந்த நபர் ஒருவரை அங்கு இருந்த ராட்வீலர் நாய் துரத்தி கடித்தது. இதில் காயமடைந்த நபரை அருகில் இருந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராட்வீலர் நாயை பிடித்த பொதுமக்கள் விருந்தினர் மாளிகை வளாகத்தில் கட்டி வைத்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். விசாரணையில் ராட்வீலர் நாயை வளர்த்த நபர் அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விட்டு சென்றதும் கடந்த சில நாட்களாக அந்த நாய் வளாகம் முழுவதும் சுற்றித் திரிந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி