பல்லடம் அருகே பட்டப்பகலில் பணம், நகை கொள்ளை

3647பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் மணி என்பவர் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை திருமண நிகழ்ச்சிக்காக சென்ற நிலையில் மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20,000 ரொக்கத்தை திருடிச் சென்றனர். வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் போலீசார் திருட்டு நடந்த இடத்தில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே பட்டப்பகலில் வீட்டில் கதவை உடைத்து ரூ. 20,000 பணம் மற்றும் 10 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி