இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

4010பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் வேலு இவருடைய மனைவி வாசுகி, இவர் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக, எக்ஸெல் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்த நிலையில், எப்போதும் போல காலை மருத்துவமனை பணிக்கு வந்த வாசுகி தனது எக்ஸெல் இரு சக்கர வாகனத்தை மருத்துவமனையின் பின்புறம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதன் பிறகு மாலை 7 மணிக்கு வேலை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது, தனது எக்ஸெல் இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து, மருத்துவமனை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பார்த்த பொழுது, சுமார் 50 வயது மதிக்கத்தக்க லுங்கி கட்டிய நபர் ஒருவர் எக்ஸெல் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து வாகனத்தை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், பள்ளிபாளையம் போலீசார் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி