மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி 73.44 சதவீதம் வாக்குப்பதிவு

2987பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில், நேற்று காலை முதல் பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிக அமைதியான முறையில் நடைபெற்றது. பொதுமக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொறுமையுடன் வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு வாக்கு பதிவு செய்தனர். அசம்பாவிதங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 73.44 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தொடர்புடைய செய்தி