பாஜக பிரச்சாரம்! உடையார்பாளையத்தில் சிறப்பான வரவேற்பு

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் வசந்த ராஜ் அவர்கள் மடத்துக்குளம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வருகை தந்தார். இந்நிலையில் துங்காவி ஊராட்சி உடையார்பாளையம் பகுதியில், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளர் விஜயகுமார் அவர்கள் மற்றும் தலைமை ஏற்று நடத்திய மண்டல தலைவர் யுவன் மணியன் அவர்கள் மற்றும் பொருளாளர் பிரகாசம் ஆசிரியர் ஏற்பாட்டில், 250 க்கு மேல் பொதுமக்கள் கூடி வசந்த ராஜன் அவர்களை வரவேற்றனர். அனைவரும் ஒன்று கூடி எங்கள் வாக்கு இந்த முறை தாமரைக்கு என்று கூச்சமிட்டனர். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி