காங்கேயம் பள்ளியில் தீயணைப்புதுறை சார்பில் தற்காப்பு பயிற்சி

78பார்த்தது
காங்கேயம் பள்ளியில் தீயணைப்புதுறை சார்பில் தற்காப்பு பயிற்சி
தற்போது தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் காங்கேயம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு அனைத்து விதமான தற்காப்பு பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு முகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆறு, கிணறு, அருவி, மழை, வெள்ளம், தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றம் போன்றவற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது, பிறரை காப்பாற்றுவது குறித்து பயிற்சி விளக்கங்களை அளித்தனர். இந்த விழிப்புணர்வு முகாமிற்கு காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மேலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் ஒத்திகை பயிற்சியும் செய்தனர்.

தொடர்புடைய செய்தி