காங்கேயம் அருகே கால்நடைகள் தொடர் திருட்டு

2613பார்த்தது
காங்கேயம் அருகே வீரணம் பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தோட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மாடுகள் திருட்டு

காங்கேயம் அடுத்த வீரணம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ராமகோபாலன் (வயது 68) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இரவு கட்டப்பட்டிருந்த மூன்று மாடுகளில் இரண்டு மாடுகளை அதிகாலை மர்ம நபர்கள் பிடித்து சென்றுள்ளனர். திருடப்பட்ட மாட்டின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என தெரிகிறது. காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாட்டை திருடிச் செல்ல நள்ளிரவில் பிக்கப் ஆட்டோவில் திருடர்கள் வந்ததும் மூன்று மாடுகளை துரத்தி பிடிக்கையில் ஒரு மாடு மட்டும் தப்பித்து ஓடிவிட்டது என தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த மாதம் 30 தேதி இதே ஊராட்சிக்கு உட்பட்ட நத்தக்காடு என்ற தோட்டத்தில் கிட்டுச்சாமி (வயது 60) என்பவருக்கு சொந்தமான இரண்டு சிந்து மாட்டை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது. இதன் மதிப்பும் சுமார் ஒரு லட்சம் இருக்கும் என தெரிய வருகின்றது. வீரணம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கால்நடைகள் திருடு போவது வாடிக்கையாகி வருகின்றது இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி