அமைச்சர் கயல்விழி கோரிக்கை நிறைவேற்றப்படும் உதயநிதி பேச்சு!

63பார்த்தது
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உண்டான திமுக வாக்குறுதி என்னவென்றால். என உதயநிதி ஸ்டாலின் தாராபுரத்தில் பேசினார் அப்போது
அரசால் வழங்கப்பட்ட பல்வேறு நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பீடு கொண்டவை என அரசு அறிவித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது அதனை செய்தித்துறை அமைச்சர் மு. பெ.
சுவாமிநாதன் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர் அதன் மீது கண்டிப்பாக முதலமைச்சர் இடம் எடுத்துச் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாராபுரம் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையத்தில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான 54, ஏக்கர் காலியிடம் உள்ளது அதில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உப்பாறு அணைக்கு காவேரி அல்லது அமராவதி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி