பேருந்து மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலி

52பார்த்தது
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், மானூர் பகுதியில் சாலையில் சென்ற பேருந்து பைக் மீது மோதியது. பைக்கில் கணவர் மற்றும் ஒரு வயது மகனுடன் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்தார். பேருந்து அவர் மீது ஏறியது. பஸ்சின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய அந்த பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் கோவாடே-நெடாலி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த சோனல் லோகாண்டே(30) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். விபத்து குறித்த CCTV காட்சிகள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி