ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி சின்னேரிபாளை யம் குருவாயூரப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கு மார் (வயது 34) கடந்த சில மாதங்களாக இவர் மன அழுத் தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரது மனைவி கடந்த நான்கு மாதங்க ளுக்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தனியாக வீட்டில் வசித்து வந்த முத்துக்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.