அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம்

1072பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான, இக்கோயிலில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த தலமான இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். சித்திரை திருவிழா முதல் நிகழ்வாக கோயிலில் கடந்த 14ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 15ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகளும், 16ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகளும், 17ம் தேதி புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சிகளும் நடைபெற்றது. நேற்றைய தினம் கருணாம்பிகை உடனமர் அவிநாசி அப்பர் திருத்தேரில் எழுந்தருளிய நிலையில் இன்று தேர் திருவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நமச்சிவாயா கோஷம் முழங்க , சிவதாளங்கள் வாசிக்க தேர் வடம் பிடித்து இழக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்பு வருகின்ற 23ம் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. இன்று நடைபெற்ற தேரோடாட்டில் அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி