திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் மயங்கி விழுந்து சாவு

54பார்த்தது
திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் மயங்கி விழுந்து சாவு
-திருச்சி கொட்டப்பட்டு இலங்கை முகாம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி துளசி தேவி (வயது 40) இவர்களுடைய மகள் பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரை பார்த்துக் கொள்ள துளசி தேவி சென்றிருந்தார். துளசி தேவிக்கு ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இந்நிலையில்
அரசு மருத்துவமனை மகளிர் பிரிவு வார்டில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி துளசி தேவி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி