திருச்சி அருகே சாலை விபத்து: கணவர் பலி; மனைவி காயம்

84பார்த்தது
திருச்சி அருகே சாலை விபத்து: கணவர் பலி; மனைவி காயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடந்த சாலை விபத்தில் கணவர் இறந்தார். இவரது மனைவி காயமடைந்தார்.
லால்குடியை அடுத்த ஆலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (61), ஓய்வு பெற்ற டால்மியா சிமெண்ட் ஆலை ஊழியர். இவரது மனைவி தனபாக்கியம் (55).
இருவரும் செவ்வாய்க்கிழமை பைக்கில் அன்பில் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு கீழன்பில் - திண்ணியம் சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பால் ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதி சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனபாக்கியம் லேசான காயத்துடன் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
தகவலறிந்த லால்குடி போலீஸார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி