30 பவுன் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை

579பார்த்தது
30 பவுன் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை
திருச்சி பீமாநகரை
சேர்ந்தவர் முஹம்மது அனீஸ். இவருக்கும் திருச்சிஎடமலைப்பட்டிபதூர் பகுதியைச் சேர்ந்த சமீனா பானு (23) என்பவருக்கும் கடந்த 2020 நவம்பர் 29-ந்தேதி திருமணம் நடந்தது முகமதுஅனீஸ் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார் இந்தநிலையில் திருமணத்தின்போது 50 பவுன் நகை, சீர்வரிசைபொருட்கள் மற்றும்ரூ5லட்சம் ரொக்கபணம் தருவதாக கூறியுள்ளனர். பின்னர் திருமணத்தின்போது 20 பவுன் நகை வீட்டு சீர்வரிசை பொருட்கள் ரூ1 லட்சம் பணம் ஆகியவற்றை கொடுத்தனர். பின்னர் திருமணம் முடிந்து 3 மாதத்தில் மீதமுள்ள நகை பணத்தை தருவதாக உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் ஆன முதல் வாரத்தில் இருந்து சமீனாபானுவை அவரது கணவர் முகமதுஅனீஸ், மாமனார் முகமதுஹனி, மாமியார்ரஹ்மத் நிஷா மற்றும் உறவினர்கள் பிஸ்மில்லாபானு, பாத்திமா சல்மா ஆகியோர் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாககூறப்படுகிறது.
மேலும் முகமதுஅனிசை அவரது பெற்றோர்கள் 2021ஜனவரி மாதத்தில்வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே கர்ப்பமடைந்த சமீனா பானுவுக்குபெண் குழந்தை பிறந்தது ஆனால்கடந்தஇரண்டு வருடம்ஆகியும் குழந்தையை தந்தை பார்க்கவரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டசமீனா பானு மாநகர போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் புகார்அளித்தார். அதன் பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர்போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி