ஸ்ரீரங்கம் ஹோட்டலில் கஞ்சாவுடன் 2பேர் கைது

81பார்த்தது
ஸ்ரீரங்கம் ஹோட்டலில் கஞ்சாவுடன் 2பேர் கைது
ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபலமான ஹோட்டலில் ஒரு கும்பல் தங்கி இருந்து கஞ்சா விற்பனை மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் பஞ்சக்கரை ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அங்கு முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா பொட்டலங்களுடன் 2 பேர் சிக்கினர். விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கவிராஜா, கேரள மாநிலத்தை சேர்ந்த ஏஞ்சல் என்பதும் தெரியவந்தது. மேலும் திண்டுக்கல் கோம்பை பகுதியைச் சேர்ந்த யாஸ் நாராயணா, சியாம் சுந்தர், சரத், ஸ்ரீவத் ஆகிய நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி