அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி பாலக்கரை பகுதிக்கு உட்பட்ட எடத்தெரு பகுதியில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்து திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கலந்து கொண்டு கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.