சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சாரதி இவர் தனது 7 வயது மகள் யாஷிகாவுடன் உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிக்காடு மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பின்னல் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை யாசிக்காவுக்கு காயம் ஏற்பட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமைக்கப்பட்டார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து சாரதி அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான சேலம் மாவட்டம் கெங்கவள்ளியை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து உப்பிலிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.