சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்து இளைஞர் உயிரிழப்பு

3673பார்த்தது
துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாலன் சம்பவம் நடந்த நேற்று தனது டிவிஎஸ் அப்பாச்சி இருசக்கர வாகனத்தில் ஒக்கரை கிராமத்தில் உள்ள கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த தனபாலன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
தகவல் அழிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உப்பிலியபுரம் போலீசார் தனபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி