மகாகாளியம்மன் கோவிலில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்காரம்

72பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறியில் துறையூர் சாலையில் காவல் நிலையம் எதிரில் மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் காலையில் காளிஅம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா காளியம்மன் பக்தர்களுக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி