அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு

69பார்த்தது
திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1665 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. 8347 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிராப்பட்டி பகுதியில் லிட்டில் பிளவர் பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமியும் வாக்கு செலுத்தினார்

வாக்கு சாவடி மையத்திற்கு வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பொறுப்பான மனிதராக வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு தான் வந்தா ஆக வேண்டும்.

நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன், சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன், இப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது.

நாங்கள் எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி