திருச்சி காவேரி பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு

65பார்த்தது
திருச்சி காவிரி பாலத்தில் 100% வாக்களிப்பிற்கு சாலை முழுதும் விழிப்புணர்வு ஓவியங்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றுப் பால சாலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள பிரமாண்ட ஓவியத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவு அலுவலகத்தில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு(14. 04. 2024) 10 மணிக்கு துவங்கி காலை 6 மணிக்குள் 8 மணி நேரத்திற்குள் 100 ஓவியர்களால் காவிரி பாலம் முழுவதும் 100% வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் பாலத்தில் வரையப்பட்டடுள்ளது.

தொடர்புடைய செய்தி