திருச்சி துவாக்குடி வடக்குமலை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் சம்பவம் நடந்த நேற்று துவாக்குடி ராவுத்தன்மேடு வெட்டுரோடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த மாரியப்பன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்காரன்யிருப்பு கிராமத்தைச் சேர்ந்த முகமது அனீஸ் என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.