சட்டவிரோத சூதாட்டம் 4 பேர் கைது

76பார்த்தது
சட்டவிரோத சூதாட்டம் 4 பேர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள பேரூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஜீயபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அப்பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அதே பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் சக்திவேல் சரண்ராஜ் ஞானவேல் ஆகிய 4 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதை அடுத்து நால்வரிடமிருந்து 200 ரூபாய் ரொக்கம் மற்றும் சீட்டாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நால்வரையும் கைது செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி