டூவீலரில் சென்றவர் மீது லாரி மோதியதில் உயிரிழப்பு

58பார்த்தது
மணப்பாறை அடுத்த வையம்பட்டி காந்திநகரை சேர்ந்த மாமுண்டி மகன் பழனியாண்டி (56). இவர், ஊர் பூசாரியாகவும், அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்து வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை தன்னிடம் சாமி பார்த்துவிட்டு திரும்பிய துலுக்கம்பட்டி வேலுச்சாமி மனைவி சுப்புலெட்சுமி(55)யை தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து கொண்டு வையம்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த பழனியாண்டி மற்றும் சுப்புலெட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பழனியாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார், பழனியாண்டி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு பின், செவ்வாய்க்கிழமை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி அடுத்த சமயன் வலசையை சேர்ந்த வேலுச்சாமி மகன் விஜயனை (24) கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி