6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் தந்தையும், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியுமான ரவி கைது செய்யப்பட்டார். நேற்று முன் தினம் இரவு தலையில் அடிபட்டதாக கூறி சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுமியை முழு உடல் பரிசோதனை செய்த மருத்துவர்கள் காயங்கள் இருப்பதை கண்டு குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், சிறுமியை அவரது தந்தை ரவி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.