நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவிப்பு

81பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவிப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இனாம் புதுவாடி ஊராட்சி, புதுவாடி மருத்துவர் காலனியில் 35குடும்பங்கள் உள்ளனர். இதில் 74வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு நாற்புறமும் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் சுதந்திரம் அடைந்து 76ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கான சாலை உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று வருகின்ற 19ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சி தலைவர் உட்பட பலருக்கு தபால் மூலம் மனு அளித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி