தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை இருவர் கைது

71பார்த்தது
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை இருவர் கைது
சமயபுரம் தேர்முட்டி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆரோக்கிய மேரிக்கு கிடைக்க தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாகாளிக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணபாரதி இருங்களூரைச் சேர்ந்த அழகுராஜ் ஆகிய இருவரும் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த பொழுது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். அவர்களிடம் இருந்து இரண்டு செல் போன்கள் ஹீரோ ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனம் ஒன்று 1660ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி