மது போதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

1889பார்த்தது
மது போதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் சசிகுமார் வயது 24. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் எந்தவித வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் நேற்று மது போதையில் வீட்டில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி