லால்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்

62பார்த்தது
லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து தண்ணீரைப் பெற்றுத் தந்து குருவை சாகுபடி செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலமாகவும் தோட்டக்கலை துறை மூலமாகவும் கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லால்குடி அருகே மேலவாழை கிராமத்தில் ஏழு தலை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே தூர்வாரி இப்பகுதியில் 2500 ஏக்கர் விவசாயம் செழித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் 15 பெண்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி