அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற இளைஞர் பலி

3987பார்த்தது
புலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சன் சம்பவம் நடந்த நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கரட்டாம்பட்டியில் உள்ள திண்ணனூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிவரஞ்சன் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயமடைந்து உயிர் இழந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து உயிரிழந்த சிவரஞ்சனின் தாய் மல்லிகா அளித்த புகாரின் பேரில் அவரது உடலை கைப்பற்றி புலிவலம் போலீசார் துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி