மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்

57பார்த்தது
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. மேலும் மழை பாதிப்பின் காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் தவித்தனர். இதனையடுத்து ஜனவரி 02, 2024 வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை மேலும் நீட்டித்து பிப்ரவரி 01, 2024 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி