நீட் தேர்வு குளறுபடி; புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

78பார்த்தது
நீட் தேர்வு குளறுபடி மற்றும் முறைகேட்டை கண்டித்து நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் ஜனநாயக அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடி மற்றும் முறைகேட்டை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தேசிய தேர்வு முகமைக்கு எதிராகபோராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

இந்நிலையில் தூத்துக்குடியில் குளறுபடிக்கு மற்றும் முறை கேட்டுக்கு காரணமான கல்வி உரிமை மற்றும் சமூக நீதியை பாதுகாக்க நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேட்டுப்பட்டி பகுதியில் வைத்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஜனநாயக அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீட் தேர்வு முறைகேடு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்

தொடர்புடைய செய்தி