மாநில அளவிலான செஸ் போட்டி: 500 மாணவ மாணவிகள் பங்கேற்பு

50பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி 17 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் காமராஜர் கல்லூரி சார்பில் மாநில அளவிலான பள்ளி மாணவ மாணவியருக்கான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டிகளை தமிழக சதுரங்க கழக மாநில துணைத்தலைவர் ஆனந்த ராமன் துவக்கி வைத்தார்.

மாநில அளவிலான இந்த சதுரங்க போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 17 மாவட்டங்கள் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதில் போட்டிகள் எட்டு வயது முதல் 17 வயது வரை மாணவ மாணவிகள் என எட்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது மேலும் பொதுப்பிரிவு போட்டிகளும் நடைபெற்றது

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை சான்றிதழ் வழங்கப்படுவதுடன் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி