மீன்வளக் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

64பார்த்தது
மீன்வளக் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் "போதை மருந்து பழக்கங்களும் அதனை தடுப்பதற்கான வழி முறைகளும்” என்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  


தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "இன்றைய மாணவர்களிடையே காணப்படும் போதை மருந்து பழக்கங்களும் அதனை தடுப்பதற்கான வழி முறைகளும்” என்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அகிலன் தலைமை வகித்தார். தருவைகுளம் மது ஒழிப்பு சபை அந்தோணி அற்புதராஜ், ராஜகன்னி மாதா ஆகியோர் போதைப் பொருள் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி மாணவர்களிடையே விரிவான முறையில் விழிப்புணர்வு வழங்கினார்.  


இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக உதவி பேராசிரியர் சிவசங்கர் வரவேற்றார். நிறைவாக உதவிப் பேராசிரியர் மாரியப்பன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இக்கல்லூரியை சார்ந்த பேராசிரியர் சா. ஆதித்தன், தலைவர் ப. சிவசங்கர், மற்றும் ச. மாரியப்பன், போதை மருந்து தடுப்பு குழுவினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி