ஊசி போட்டுக்கொண்ட பெண் கையை இழந்த பரிதாபம்

66பார்த்தது
ஊசி போட்டுக்கொண்ட பெண் கையை இழந்த பரிதாபம்
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெண் ஒருவர் இடுப்பு வலிக்காக ஒரு மருத்துவர் ஒருவரிடம் சென்றுள்ளார். அந்த மருத்துவர் அந்த பெண்ணுக்கு விரைவான நிவாரணத்திற்காக வலி நிவாரணி ஊசி போட்டுள்ளார். 32 வயதான அந்த பெண் ஒருவர் வலி நிவாரணி ஊசி செலுத்திக்கொண்டதன் மூலம் தனது கையை இழந்துள்ளார். இதை லக்னோவில் உள்ள கேஜிஎம்யுவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் சையத் கூறியுள்ளார். லேசான வலிக்கு இன்ட்ரா ஆர்டிரியல் பெயின் கில்லர் ஊசி போட்டதால் இது நடந்ததாக அவர் கூறினார். விசாரணையில் அவர் போலி மருத்துவர் என தெரியவந்துள்ளது.