முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்த பின்னணி பாடகி பி.சுசீலா

77பார்த்தது
முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்த பின்னணி பாடகி பி.சுசீலா
88 வயதாகும் பின்னணி பாடகி சுசீலா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் முடி காணிக்கை கொடுத்து தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 பேரின் துணையுடன் நடக்க முடியாமல் வந்த பி.சுசீலா, முடி காணிக்கை செலுத்திவிட்டு, சாமி தரிசனம் செய்தார்.மேலும் நாராயண மந்திரம் பாடலை மூச்சிறைக்க பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சுசீலாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தனது இனிய குரலால் பெரும் புகழ்பெற்ற பி.சுசீலா தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

தொடர்புடைய செய்தி