3 மாவட்டங்களில் புதிய சிப்காட் - மானிய கோரிக்கையில் அறிவிப்பு

78பார்த்தது
3 மாவட்டங்களில் புதிய சிப்காட் - மானிய கோரிக்கையில் அறிவிப்பு
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாங்குளத்தில் 10 ஏக்கரில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ரூ.2.70 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சங்கராபேரியில், ரூ.6.51 கோடி மதிப்பீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் சிப்காட் அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கொத்தயத்தில் ரூ‌.16.58 கோடி மதிப்பில் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் சிப்காட் அமைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி