அமைச்சரை திரும்ப அனுப்பி கிராம மக்கள்!

4645பார்த்தது
தூத்துக்குடி அருகே தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொட்டலூரணி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காரை விட்டு இறங்கவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அடித்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் கிராமத்தின் அருகே உள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று (19.04.2024) பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அந்த கிராமத்திற்கு திமுகவினருடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் காரை விட்டு இறங்கவிடாமல் தடுத்தனர். மேலும் மக்கள் இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள் இப்போது ஏன் வருகிறீர்கள் எனக் கூறி பேச்சு வார்த்தை வேண்டாம் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம். எனக் கூறி அனிதா ராதா கிருஷ்ணனை அங்கிருந்து விரட்டினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி