உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய சதி செய்த பாவெல் கே என்ற நபர் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த பாவெல், ரஷ்ய ராணுவ உளவுத்துறைக்கு தகவல் கொடுத்து, செலான் ஸ்கியை படுகொலை செய்ய திட்டமிட்டதாகவும், அவருக்கு ரஷ்ய சிறப்பு படைகள் உதவியதாகவும் தெரியவந்துள்ளது. அவர் போலந்தில் உள்ள Rzeszów Zcionka விமான நிலையத்தில் பாதுகாப்பு விவரங்களை சேகரித்து ரஷ்யாவிற்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது.