குவைத் தீ விபத்து: தொழிலாளி குடும்பத்திற்கு கனிமொழி ஆறுதல்

3727பார்த்தது
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு கனிமொழி எம்பி ஆறுதல் கூறி, அவர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான நிவாரண உதவி காசோலையை வழங்கினார்.

குவைத்தில் நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்த வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் குடும்பத்திற்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் அறிக்கப்பட்ட ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை மாரியப்பன் குடும்பத்தினரிடம் கனிமொழி எம்பி வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தென்காசி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட கவுன்சிலர் ப்ரியா குரு ராஜ், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், தாசில்தார் சரவண பெருமாள், கிராம வருவாய் அலுவலர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் அபிராம சுந்தரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி